Tuesday, April 27, 2010

தெரு பாட்டுக்காரன்

வெகு ஜன இரைச்சலின் ஊடேயும்
தேன் குரலில் காதில் வந்து
பாயும் உன் கானங்கள்
கொடுக்கும் மகிழ்ச்சிக்கு
நன்றி சொல்ல
வார்த்தைகள் உண்டு
ஆனால் என்னிடம்
வாய் இல்லை
கை கூப்பினேன்
பார்க்க உன்னிடம்
பார்வையே இல்லை.

15 கருத்துரைகள்:

பாராட்டுகின்றேன் ,மனது நிறைய எழுத்துக்களால். அறிந்துக்கொள்வாய் விரல்களால்.

கை கொடுக்கலாமே?

ஆனால் என்னிடம்
வாய் இல்லை
கை கூப்பினேன்
பார்க்க உன்னிடம்
பார்வையே இல்லை.


....paavam. மனதை நெருடி விட்டது.

அட கவிதை சூப்பராக இருக்கே.என்ன அருமையாக சொல்லிருக்கீங்க.பாராட்டுக்கள்.

ஆஹா!அழகான கவிதை

நல்ல அருமையான கவிதை.. ரொம்ப உணர்வு பூர்வமா இருக்கு மின்மினி.. இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்க..

க‌விதை ந‌ல்லா இருக்கு... தொட‌ருங்க‌ள்...

மனதை நெருடிய அழகான கவிதை!!

கவிதைக் கரு அழகு!
தொடருங்கள்!!

ரொம்ப நல்லாருக்குங்க.

கவிதை அழகா இருக்குங்க

பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்.

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...