Wednesday, October 27, 2010

நபி மொழிகளில் சில...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் இருந்து சிலவற்றை அறிந்து கொள்ளலாம்.

நபி மொழிகளில் சில..

1. ஸலாமைப் பரப்புவது

நீங்கள் ஈமான்கொள்ளாமல் சுவனத்தில் பிரவேசிக்கவே முடியாது. ஒருவரையொருவர் நேசிக்காமல் ஈமான்கொள்ள இயலாது. எதை செயல்படுத்தினால் நீங்கள் பரஸ்பர நேசம் கொள்வீர்களோ அதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?.. உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்.

நபிமொழி (முஸ்லிம்).

2. உடல் வேதனைக்கு நிவாரணம் தேடல்

உடலில் வேதனை ஏற்படுவதாக உணர்ந்தால் வேதனையேற்படும் இடத்தில் உமது கையை வைத்து மூன்றுமுறை பிஸ்மில்லாஹ் கூறிவிட்டு ஏழு தடவை

أعوذ بالله وقدرته من شر ماأجد وأحاذر

அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மாஅஜிது வ உஹாதிரு.

நான் உணருகின்ற மற்றும் அஞ்சுகின்ற வேதனையை விட்டு அல்லாஹ்வைக் கொண்டு _ அவனது ஆற்றலைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகின்றேன்.

என்று ஓதுவீராக என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

3. நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்தாமல் இருத்தல்.

மக்கள் நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்தாமல் இருக்கும் வரை நனமையிலே நீடிக்கிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

4. கவலையோ நெருக்கடியோ ஏற்படும்போது பாதுகாப்பு தேடல்.

اللهم اني أعوذ بك من الهم والحزن ' والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال

அல்லாஹும்ம இன்னி அவூதுபிக்க மினல் ஹம்மி வல்ஹஸன் வல் அஜ்ஸி வல் கஸல் வல்புக்லி வல்ஜுப்ன் வளலயித்தைனி வகலபதிர் ரிஜால்.

இறைவா! கவலை, துயரம், இயலாமை, சோம்பேறித்தனம், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் ஆகியவற்றை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என நபி (ஸல்) ஓதுவார்கள். (புகாரீ).

5. கெடுதிகளிலிருந்து குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தேடல்:

நபி (ஸல்) அவர்கள் தமது பேரக்குழந்தைகளான ஹஸன் - ஹூஸைன் (ரலி) இருவருக்கும் பாதுகாப்பு தேடும் விதமாக

أعيذكما بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة .

உயீதுகுமா பிகலிமாத் தில்லாஹித்தாம்மா மின்குல்லி ஷைத்தானின் வஹாம்மா வமின் குல்லி ஐனின் லாம்மா.

ஷைத்தான் மற்றும் விஷ ஜந்துக்களின் அனைத்து தீங்குகளை விட்டும், கண்திருஷ்டியின் அனைத்து பாதிப்புகளை விட்டும் அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு உங்கள் இருவருக்கும் நான் பாதுகாவல் தேடுகின்றேன் என்று ஓதுவார்கள். (புகாரீ).

,

5 கருத்துரைகள்:

பகிர்வுக்கு நன்றி சகோ.. மிக அழகாக தெளிவாக எழுதி இருக்கீங்க..

அருமை அருமை, ஜஸாகில்லாஹ்.

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நபிமொழிகள்.பகிர்வுக்கு நன்றி.நான் 4,5 ஆகியவற்றை மனனம் செய்ய வேண்டும்.தேவைப்படும் பொழுது ஓதிக்கொள்ளலாம்.

அருமையா இருக்கு சகோ. தொடர்ந்து நிறைய எழுதுங்க.

அருமை. அனைவரும் கடைபிடிக்க வேண்டிய நபி மொழிகளை பற்றி அறிந்து கொண்டோம். மேலும் தொடருங்கள் மின்மினி.