அன்புமிக்க தோழ தோழிகளே !! உங்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கிறேன். என்னடா இவள் இத்தன நாள் எங்கே காணோமென்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் ஊருக்கு அம்மா வீட்டுக்கு சென்றபடியால் என்னால் பதிவு எழுதமுடியவில்லை. இருந்தாலும் தினமும் என்பக்கத்துக்கு வந்து சென்ற உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று எளிமையான முறையில் முட்டைக்குழம்பு வைப்பது பற்றி
இங்கே காணலாம். இந்த அவசரயுகத்தில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சமையல் செய்வது கொஞ்சம் கஷ்டமானதுதான். இந்த முட்டைக்குழம்பு எளிதில் செய்துவிடலாம். சுமார் ஒரு 1/2 மணிநேரம்தான் ஆகும்.
இந்த முட்டைக்குழம்பு 2 பேர் சாப்பிடும் அளவுக்கு... வீட்டில் உள்ளவர்களை பொறுத்து அளவுகள் மாறலாம்.
தேவையான பொருள்கள் :முட்டை 4
வெங்காயம் 2
தக்காளி 2 மிளகாய் 3
இஞ்சி சிறிதளவு
பூடு 4 பல்
கொத்தமல்லி இலை சிறிதளவு
கரம் மசாலா 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூடு, மிளகாய், மல்லி இலை, கரம் மசாலா எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் வாணலியில் பாத்திரத்தில் எண்ணை விட்டு அரைத்து வைத்தவற்றை பாத்திரத்தில் கொட்டி நன்றாக கொதிக்கவைக்க வேண்டும்.
முட்டையை உடைத்து பாத்திரத்தில் கொட்டிவிட வேண்டும். முட்டை வெந்ததும் மல்லி இலையை தூவி இறக்கிவிட வேண்டும்.
இப்போது முட்டைக்குழம்பு தயார். எளிமையா இருக்கா..
நீங்களும் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
உங்கள் மின்மினி.,